பணம்-செல்போன் திருட்டு
திருச்சி, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தசெல்லம்மாள் (69). இவர் 24ம்தேதி தனியாக வீட்டின் பின்புறமாக நுழைந்த மர்ம நபர் படுக்கை அறையில் இருந்த செல்போன் மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றார்.
வழக்கு பதிவு
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு கேமரா பதிவுகளின் மூலம் மர்ம நபரை தேடி வந்தனர்.
திருடிய மர்ம நபர் கைது
இந்நிலையில்,திருடியது எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் கார்த்திக் (21) என தெரியவர, போலீசார் அவரை கைது செய்தனர்.