துறையூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் அஜித்குமார் (23), மகள் நித்யா (20).
கடந்த 6 ஆம் தேதி இரவு வீட்டருகே இருந்த கடைக்கு சென்ற நித்யாவை அந்த பகுதியைச் சோ்ந்த 4 இளைஞா்கள் கேலி செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட அவரது அண்ணனை, அவா்கள் கல்லால் அவரைத் தாக்கினர்.
இதில் காயமடைந்த அவர் துறையூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின்பேரில் துறையூா் போலீஸார் வழக்குப் பதிந்து மேட்டுத்தெருவைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன்கள் தனபால் (23), சங்கா் (19) பெரியசாமி மகன்கள் வெங்கடேஷ் (20), கனகராஜ்(19) ஆகியோரை நேற்று கைது செய்தனா்.