தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துகழகம்சார்பில் திருச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று (புதன்கிழமை) காலை முதல் தினசரி சேவையாக விரைவு பேருந்து இயக்கப்படுகிறது.
இது திருச்சியில் இருந்து தினமும் காலை 9 மணி மற்றும் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூருக்கு செல்லும். இதேபோல் திருச்செந்தூரில் இருந்து இரவு 9 மணி மற்றும் மறுநாள் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வந்து சேரும்.
இந்த பேருந்து மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி வழியாக இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
இதனை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.