திருச்சி தா.பேட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சேகர் (40). தனியார் ஆலையில் வாகன டிரைவராக வேலைபார்த்து வந்தார்.
இவர் தனது மோட்டார் சைக்கிளில் அடியான் கருப்பு கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே ராமராஜ் (42) ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இவர் பைத்தம்பாறை கிராமத்தை சேர்ந்தவர்.
இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். ஆனால் சம்பவ இடத்திலேயே சேகர் உயிரிழந்தார். ராமராஜ் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து சேகர் உடலை பிரேத பரிசோதனைக்கு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.