
திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்தஜெகதீசன் (70). திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 24ம் தேதி தனது ஸ்கூட்டரில் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து திருவானைக்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தபோது காவேரி பாலம் ரோடில் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவர்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
