சமயபுரம் ஈச்சம்பட்டியைச்சேர்ந்தவர் தேவராஜ் (49). இவர் சமயபுரத்தில் வெல்டிங் பட்டறை வைத்திருக்கிறார். கடந்த 21ம் தேதி பட்டறையில் இருந்து வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கம் பிரிவு ரோடு அருகே வந்து கொண்டிருந்த போது, தொண்டியில் இருந்து சென்னைக்கு சென்ற அரசு விரைவு பஸ் அவர் மீது மோதியதில் பலத்தகாயம் அடைந்தார். உடனே அவர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தேவராஜ் இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் விழுப்புரத்தைச் சேர்ந்த ரகோத்தமனை (47) கைது செய்தனர்.