திருச்சியில் ஆயுதப் பட்டறையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
திருச்சி மாநகரில் 28.09.21-ஆம் தேதி ஆயுதம் தயாரிப்பு பட்டறை வைத்து நடத்தும் உரிமையாளர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது
அதன்படி 1) காந்திமார்க்கெட் காவல் நிலையம், 2) கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரவி மினிஹால், 3) பாலக்கரை காவல் நிலையம், 4) தில்லைநகர் காவல் நிலையம், 5) உறையூர் காவல் நிலையம் மற்றும் 6) ஸ்ரீரங்கம் காவல் நிலையம் ஆகிய 6 இடங்களில் மொத்தம் 118 நபர்ககள் மற்றும் பலருடன் திருச்சி கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ரவி மினிஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சக்திவேல் கலந்துகொண்டு விழிப்புணர்வு குறித்தும், குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்தும் பேசினார்.
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரின் அறிவுரையின்படியும், உத்தரவின்படியும் ஆப்ரேசன் டிஸ்ஆர்ம் (Operation Disarm)திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயனின் அறிவுரைகளின் பேரிலும், திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுத தயாரிப்பு பட்டறைகளில், ஆயுதங்கள் புதியதாக வாங்கும் நபர்கள் மற்றும் ஆயுதங்களை புதுப்பிக்க வரும் நபர்களின் விவரங்களை பதிவேடுகளில் பதிவுசெய்து முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், அதன் விவரங்களை வாரத்திற்கு ஒரு முறை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு ஒப்படைக்கவேண்டும் என்றும், அனைத்து ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறைகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு அவற்றையும் முறையாக பராமரிப்பு செய்யவேண்டும் என்றும், ஆயுதம் தயாரிப்பு பட்டறை வைத்து நடத்தும் உரிமையாளர்களை ஒருங்கிணைப்பு செய்து ஆலோசனை கூட்டம் நடத்தி குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
மேலும், திருச்சி மாநகர பகுதிகளில் குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கவும், எவரேனும் ஆயுதங்களுடனோ அல்லது கூட்டாகவோ அல்லது அசம்பாவிதம் செய்யும் குற்ற நோக்கத்துடன் பேசிக்கொண்டு பயணம் செய்வது பற்றிய தகவல் தெரியும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், அதை காவல் துறையினருக்கு உடனடியாக தெரிவிக்கும் பொருட்டு அந்தந்த காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்களை ஒருங்கிணைப்பு செய்து ஆலோசனை கூட்டம் நடத்தி குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்றபடுத்த அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்களை ஒருங்கிணைப்பு செய்து 1) கண்டோன்மெண்ட் காவல் சரகத்தில் கவிதா ஹோட்டல், குறிஞ்சி ஹோட்டல், கல்பனா ஹோட்டல், ரயில்வே ஜங்சன் ரவுண்டானா, பர்வீன் டிராவல்ஸ், வ.உ.சி ரோடு, சுப்பிரமணியபுரம் ஆட்டோ ஸ்டாண்டுகளிலும், 2) பொன்மலை காவல் சரகத்தில் பொன்மலை ஆர்மரிகேட் ஆட்டோ ஸ்டாண்டிலும், 3) கோட்டை காவல் சரகம் சத்திரம் பேருந்து நிலையம், காந்திமார்க்கெட் நான்கு ரோடு சந்திப்பு, வரகனேரி, மரக்கடை ஆட்டோ ஸ்டாண்டுகளிலும், 4) ஸ்ரீரங்கம் காவல் சரகம், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம், திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, மூலத்தோப்பு, சாலை ரோடு, ஜெயந்தி ஹோட்டல் ஆட்டோ ஸ்டாண்டு ஆகிய 28 இடங்களில் மொத்தம் 375 நபர்களை வைத்து ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்பட்டது.
இனி வரும் காலங்களில் குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு எவரேனும் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை புதியதாக வாங்கவோ அல்லது செய்யச்சொல்லவோ அல்லது புதுப்பிக்கவோ ஆயுத தயாரிப்பு பட்டறைக்கு வரும் நபர்களின் உண்மையான முகவரி மற்றும் செல்போன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவேட்டில் பதிவு செய்த பிறகே ஆயுதங்களை வழங்கவேண்டும் என்றும், கண்டிப்பாக சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்றும், மேலும் குற்ற சம்பவங்கள் குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் முன்கூட்டியே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், அவ்வாறு தகவல் தருபவர்களின் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.