திருச்சியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மர்ம சாவு:
திருச்சியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மர்ம சாவு:
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராபர்ட் ரூஸ் வெல்ட் (50). இவர் மணப்பாறை காவல் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ராபர்ட் பணி முடித்து வீட்டிற்கு வந்த போது போதையில் இருந்ததாகவும், அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மேலும் அவர் மயங்கி விழுந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.