திருச்சி தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்:

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்:
இந்திய அஞ்சல் துறை வணிக இலக்கு என்ற பெயரில் பணி நெருக்கடி தருவதாக கூறி நேற்று (14/09/2021) திருச்சி தலைமை தபால் நிலையத்தில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் தபால்காரர் மற்றும் பன்முக திறன் ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி கோட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜன் பொருளாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் வணிக இலக்கு என்ற பெயரில் பணிகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க சொல்லி நெருக்கடி கொடுப்பதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
