திருச்சி தனியார் மருத்துவமனையில் முதியவர் தற்கொலை:

திருச்சி தனியார் மருத்துவமனையில் முதியவர் தற்கொலை:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (61). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று (13/09/2021) சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
