திருச்சியில் வாகன சோதனையில் 11லட்சம் பணத்துடன் சிக்கிய போலீஸ் துணை சூப்பிரண்டு:

திருச்சியில் வாகன சோதனையில் 11லட்சம் பணத்துடன் சிக்கிய போலீஸ் துணை சூப்பிரண்டு:
திருச்சி கே.கே.நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் இருந்த ஒரு நபர் போலீசாரைக் கண்டு தப்பியோடினார்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசார், நபரை பிடித்து அவர் வந்த காரில் சோதனை மேற்கொண்டபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.11 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் காரில் இருந்து தப்பி ஓடியது திருச்சியை சேர்ந்த போலீஸ் துணை சூப்பிரண்டு என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸார் பணத்தை பறிமுதல் செய்து காரில் வந்த 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
