கே என் நேரு தனது துறை சம்பந்தமான திட்டங்களை இன்று (ஆகஸ்- 24) சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்!
2021-2022 ஆம் ஆண்டிற்கான நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக சட்டமன்றம் செல்வதற்கு முன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் இன்று புதிய மாநகராட்சி, நகராட்சி உருவாக்கம் குறித்த பல்வேறு அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..