திருச்சியில் எரிந்த நிலையில் ஆண் சடலம்: உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை:

திருச்சியில் எரிந்த நிலையில் ஆண் சடலம்: உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை:
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீர்புரம் பாலம் அருகே எரிந்த நிலையில் 55 வயதுடைய ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடல் முழுவதும் எரிந்து அழுகிய நிலையில் இருப்பதால் யார் என அடையாளம் காண முடியவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? இது கொலையா? தற்கொலையா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
