திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு

திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை தேர்வு
திருச்சி மத்திய சிறையில் சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் (26/02/2021) கைதிகளுக்கு அடிப்படை தேர்வு நடத்தப்பட்டது. இதில் 300 கைதிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

சிறை சூப்பிரண்டு சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர் முத்துச்செல்வம், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்ட அலுவலர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் தேர்வானது நடைபெற்றது.

மேலும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசு, திருச்சி மேற்கு மேற்பார்வையாளர் செந்தில்குமார், மத்திய சாலை சிறப்பு தன்னார்வலர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
