திருச்சியில் அரசு ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

திருச்சியில் அரசு ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
அண்ணல் காந்தியடிகள் நினைவு நாள் நாளை (30.1.2021) நாடு முழுவதும் தியாகிகள் தினமாக
அனுசரிக்கப்படுகிறது. நாளை அரசு விடுமுறை தினம் என்பதால் திருச்சிராப்பள்ளி மாவட்ட
ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தியாகிகள் நினைவாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு,இ.ஆ.ப., தலைமையில் இன்று
(29.01.2021) நடைபெற்றது.
முன்னதாக அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியும், மற்றும் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும், பணியாளர்களும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

இதேபோல், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி இன்று (29.01.2021) எடுக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று 29.01.2021 காலை 11.00க்கு சுதந்திரபோராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஆணையர் திரு. சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் வாசிக்க அதனைதொடர்ந்து மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளர்கள் பின்தொடர்ந்து கூறி தீண்டாமை எதிர்ப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செயற் பொறியாளர்கள் திரு. பி. சிவபாதம், உதவி ஆணையர்கள் திரு.எஸ்.திருஞானம், திரு.ச.நா.சண்முகம், திரு.சி.பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
