நாளை (22.01.2020) குடிநீர் விநியோகம் ரத்து:

நாளை (22.01.2020) குடிநீர் விநியோகம் ரத்து:
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர்ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணைமின் நிலையத்தில் மின்வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி 22.01.2021 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதால் மின்விநியோகம் இருக்காது.

எனவே, ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சஞ்சீவிநகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான விறகுப்பேட்டை, மகாலக்ஷ்மிநகர், நேருஜிநகர், அரியமங்கலம், உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில்நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான முன்னாள் இராணுவத்தினர் காலணி ,விவேகானந்தநகர், ஜே.கேநகர், மேலகல்கண்டார்கோட்டை ,பொன்னேரிபுரம், கல்லுக்குழி,பொன்மலைப்பட்டி, மத்தியசிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமானநிலையப்பகுதி, காமராஜ் நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல்நகர், ஆனந்த் நகர், சத்யவானி முத்துநகர், அய்யப்பநகர் மற்றும் கோ.அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர், மங்களாநகர், பாத்திமாநகர், சிவாநகர், ரெயின்போநகர், செல்வாநகர், ஆனந்தம்நகர், பாரதிநகர், புத்தூர்பகுதி, எடமலைபட்டிப்புதூர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர்,கிராப்பட்டி போன்ற பகுதிகளில் 22.01.2021 நாளை ஒருநாள் மட்டும் குடிநீர்விநியோகம் இருக்காது. மறுநாள் 23.01.021 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொருத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
