திருச்சி சிறையில் பரோலுக்கு 57 கைதிகள் மனு:

திருச்சி சிறையில் பரோலுக்கு 57 கைதிகள் மனு:
திருச்சி சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 1500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், ஆயுள் தண்டனை கைதிகளுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்ற நாட்களில் நன்னடத்தை அடிப்படையில் 3 நாட்கள் முதல் 6 நாட்கள் வரை பரோல் வழங்கப்படும்.
அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையயை முன்னிட்டு பரோலில் செல்ல திருச்சி சிறையில் உள்ள 57 கைதிகள் மனு அளித்துள்ளனர். இதில், கைதிகளின் நன்னடத்தை, தண்டனை காலம் ஆகியவற்றை பரிசீலனை செய்து பரோல் வழங்கப்படுகிறது.
