திருச்சியில் நேற்று (7.01.2021) புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று: 2 பேர் பலி

திருச்சியில் நேற்று (7.01.2021) புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று: 2 பேர் பலி

திருச்சியில் நேற்று (8.01.2021) புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,327 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று 34 போ் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 13,980 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று, 67 வயது மூதாட்டி மற்றும் 62 வயது முதியவர் ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
