திருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு கருத்தடை முகாம்:

திருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு கருத்தடை முகாம்:
திருச்சி மாவட்டம், வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) ஆண்களுக்கான சிறப்பு கருத்தடை முகாம் நடைபெறவுள்ளது.
நவீன குடும்பலநல கருத்தடை சிகிச்சை இருவார விழாவை முன்னிட்டு இதில் பங்குபெறும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1100 வழங்கப்படும். மயக்கமருந்து கொடுக்காமல் ஓரிரு நிமிடங்களில் அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சைக்குபின் மருத்துவமனையில் தங்க வேண்டாம். கத்தியின்றி, ரத்த சேதமின்றி தையல், தழும்பின்றி செய்யப்படும் இந்த அறுவ சிகிச்சையால் எந்த வித பின்விளைவுகளும் இருக்காது என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
