திருச்சியில் இன்று (23.11.2020) குறைதீர்க்கும் நாளில் வாட்சப் செயலி மூலம் 351 மனுக்கள்:

திருச்சியில் இன்று (23.11.2020) குறைதீர்க்கும் நாளில் வாட்சப் செயலி மூலம் 351 மனுக்கள்:
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் வாட்சப் செயலி மூலம் 351 மனுக்கள் பெறப்பட்டது

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (23.11.2020) நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் வாட்சப் செயலி மூலம் 351 மனுக்கள் பெறப்பட்டது. குறைதீர்க்கும் நாளில் வாட்சப் செயலி மூலம் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும்; நிலம் தொடர்பான 98 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 10 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 50 மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 37 மனுக்களும், புகார் தொடர்பாக 26 மனுக்களும், கல்வி உதவிதொகை வங்கி கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 4 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண் குழந்தைகள் திட்டம், சலவைப்பெட்டி, தொடர்பாக 31 மனுக்களும், பென்சன், நிலுவை தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நல வாரியம் தொடர்பான மனுக்கள் தொடர்பாக 5 மனுவும் என மொத்தம் 261 மனுக்களும், இதர மனுக்கள் 90 என மொத்தம் 351 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
