திருச்சி அருகே கல்லூரி மாணவி தற்கொலை:

திருச்சி அருகே கல்லூரி மாணவி தற்கொலை:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கவரப்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகள் ஷாலினி (21) கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவர் அதிகமாக செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை பழக்கமாக கொண்டுள்ளார். இதைப் பார்த்த ஷாலினியின் தாய் மகேஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஷாலினி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
