அமமுகவில் இணைந்த மாற்றுகட்சி மகளிரணியினர்
அமமுகவில் இணைந்த மாற்றுகட்சி மகளிரணியினர்!
திருச்சி, :சமத்துவ மக்கள் கட்சி மகளிரணி மாவட்ட துணைச் செயலாளர் விசாலாட்சி தலைமையில் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியிலிருந்து திரளான பெண்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அணி செயலாளர்கள் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், பாலாஜி, சொக்கலிங்கம், வி.எல்.சீனிவாசன் மற்றும் பகுதி செயலாளர் வேல்முருகன், தொழிற்சங்க பேரவை மாரிமுத்து, வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மகளிர் அணி இணைச் செயலாளர் ராஜலட்சுமி,
உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்