திருச்சியில் 7 வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி:

திருச்சியில் 7 வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி:
திருச்சி செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் பால்வியாபாரி. இவரது மனைவி லட்சுமி (வயது 42). இவர்களின் மகன் சிவா என்ற ராஜரத்தினம் (20). இவரும் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியை, காதலித்து வந்துள்ளார்.அந்த மாணவியிடம் 2 முறை ராஜரத்தினம் காதல் கடிதம் கொடுத்து, உன்னை நான் காதலிக்கிறேன் என தொல்லை கொடுத்துள்ளார்.
அதற்கு மாணவி மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜரத்தினத்தின் தாயார், மகன் காதல் வயப்பட்டதை அறிந்து ஆத்திரம் அடைந்து மாணவியை சாதிபெயரை சொல்லி திட்டி கடுமையாக கண்டித்துள்ளார்.இதனால், மனவேதனை அடைந்த அந்த மாணவி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து வீட்டில் மயங்கி கிடந்த மாணவியை, பெற்றோர் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு லட்சுமி, இவரது மகன் ராஜரத்தினம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
