பிரபல நகைக்கடை அதிபரின் மகன் நடத்திய விபத்து

சென்னை – திருச்சி தேசியநெடுஞ்சாலையில், திருச்சி சமயபுரம் அடுத்த மோர் குளத்தில், கடந்த அக் 31 ஆம் தேதி வியாழக்கிழமை அதிவேகமாக வந்த வெளிநாட்டு கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த, டோல்பிளாசா ஊழியர் சாமுவேல் ரமேஷ் பிரபாகரன் பலியானார். படுகாயமடைந்த மற்றொரு இளைஞர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமயபுரம் போலிசாரின் விசாரணையில்…

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்றது, பிரபல நகைக்கடை அதிபரின் மகன் என்பது தெரியவந்துள்ளதாக தகவல்.
ஒவ்வொரு நாளும் ஓராயிரம் இனிய பயணங்கள் தொடங்கும் இடத்தில் சோகம்.
