திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு

திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பினால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர காய்ச்சலுக்காக 24 மணிநேரமும் இயங்கக்கூடிய சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சராசரியாக நாளொன்றுக்கு 25 முதல் 30 பேர் வரை காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறார்கள். திருச்சி அரசு மருத்துவமனையில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மேலும் 2 பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அவர்களுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டால் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
