மாநில அளவிலான டேக்வான்டே போட்டிகள் பதக்கம் வென்ற திருச்சி விரர்கள்.

தமிழ்நாடு டேக்வான்டே சங்கம் மற்றும் தினமணி நாளிதழ் சார்பாக தர்மபுரி மாவட்டத்தில் 32வது மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், சென்னை, திருச்சி நாகை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரத்து 450க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் சப்-ஜூனியர், கேடர் பிரிவுகளில் நடைபெற்றது.

இப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் – வீராங்கனைகளுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இப்போட்டியில் திருச்சி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகத்தின் சார்பில் பயிற்சியாளர் பரணிதேவி தலைமையில் கலந்துகொண்ட வீரர்கள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 5வெண்கலப் பதக்கங்களை வென்றனர். வெற்றிபெற்ற வீரர்களை விளையாட்டு விடுதி மேலாளர் ரமேஷ்,
அணி மேலாளர் சுல்தானுஆரிபின்
ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்.
