திருச்சி காவல் துறையில் தொடர்ந்து நிகழும் அவலம்.

திருச்சி காவல் துறையில் தொடர்ந்து நிகழும் அவலம்.
திருச்சி காவல்துறையில் கடந்த சில நாட்களாக தொடர் அவலம் ஏற்பட்டுக் கொண்டுதான் வருகிறது. காதல் வைபோகத்தில் சிக்கி காலியாகிக் (இறந்து) கொண்டிருக்கும் பெண் காவலர்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பெண்கள் சிறை காவலர்(வார்டன்) செந்தமிழ்ச் செல்வி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அனைவருக்கும் நினைவில் இருக்கும் இவ்வழக்கில் திருச்சி மத்திய சிறைச்சாலையில் காவலராக(வார்டன்) பணியாற்றி வந்த வெற்றிவேல் என்பவர் தனது ஆசை வார்த்தைகளால் செந்தமிழ்ச் செல்வியை மயக்கி உன்னை காதலிக்கிறேன் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றெல்லாம் கூறி மனதை மாற்றி இறுதியில் வெற்றிவேல் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்துக்கொள்ளபோக செந்தமிழ்ச்செல்வி தூக்கிட்டு இறந்து போகிறார்.

இச்சம்பவத்தை அடுத்து இன்று திருச்சி சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த குளித்தலையைச் சேர்ந்த பெண் காவலர் ராஜலெட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதனையடுத்து விசாரிக்கையில் 2017 ஆம் ஆண்டு திருச்சி ஆயுதப்படை பிரிவில் ராஜலெட்சுமி பணியமர்த்தபடுகிறார். இவர் திடீரென இன்று காலை தனது குடியிருப்பில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருடைய போலீசார் உடலை கைப்பற்றி அரசு உடற்கூறு பிரிவிற்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் போலீசார் விசாரணையில் ராஜலெட் சுமி அரலிவிதை சாப்பிட்டிருப்பதாகவும், அவர் கர்பமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனை வைத்து போலீசார் காதல் விவகாரத்தால் தான் இந்த சம்பவம் நடைப்பெற்றுப்பதாக கூறமுடிகிறது. இருப்பினும் போலீசார் யார் அந்த காதலன் என்று விசாரித்து துப்பு துலக்கும் போது ஒரு போலீசார் பெயர் அடிபடுகிறது……???????
யார் அந்த காக்கி காதலன் ..
திருச்சி ஸ்பெஷல்
பட்டலியான் பணியாற்றும் சிவக்குமார் இவர்
தான் ராஜலெட் சுமியை காதலித்து வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
